Thursday 14 April 2011

அட மானங்கெட்ட தமிழா !!!!

சித்திரை ஒன்னு..

பள்ளி காலத்தில்.. தமிழ் புத்தாண்டாக கொண்டாடியிருக்கிறேன்..

அவியல், பாயாசம்  என்று வீடே அன்று கமகமக்கும் ..

முறுக்கு, அதிரசம் என்று அம்மா சுட்ட பலகாரங்களை பக்கத்துக்கு வீட்டுக்கு தட்டில்  கொண்டு போய் குடுப்பேன்..

அந்த வீட்டில் இருக்கும் சிறுவர்களும் அவர்கள் வீட்டுப் பலகாரங்களை எங்களுக்கு கொண்டு வந்து தருவார்கள்..

வருடத்தில் வரும் எல்லா பண்டிகைகளுக்குமே இது அநேகமாக நடக்கும்.. இனி வரும் காலங்களில் இது நடக்குமா என்று கேட்டால் எனக்கு என்னமோ நடக்காது என்று தான் தோன்றுகிறது.. பிளாட்டை வாங்கிப் போட்டுவிட்டு அதை லாட்ஜ் மாதிரி பயன் படுத்திக் கொண்டிருக்கும், வாழ்கையை வாழாத சாப்ட்வேர் இஞ்ச்நீர்களிடம் இதை எதிர் பார்ப்பதும் முட்டாள் தனம் ..

சரி அவிங்கள திட்ட ஆரம்பிச்சா நாள் பூரா திட்டலாம்.. அதா அப்புறம் பாப்போம் ..

மேட்டர்க்கு வருவோம் ..

அப்புறம் இந்த கேபிள் டிவி வந்த பிறகு எல்லா பண்டிகைகளுக்கும் சிறப்பு மங்கள இசை , சிறப்பு வணக்கம் தமிழகம் ,  சிறப்பு நகைச்சுவை பட்டி  மன்றம் ,  அந்த நடிகையோட சிறப்பு பேட்டி, இந்த பண்டிகைக்கு வெளியாகும் படங்களின் ஒரு சிறப்பு பார்வை, அப்புறம் "இந்திய தொலைகாட்சிகளின் வரலாற்றிலயே முதல் முறையாக"னு எதாவது படம்.. இப்படி டிவி முண்ணாடி உட்காந்தே நாள் போய்டும்..

பிறகு கொஞ்சம் கொஞ்சமாக தமிழர் வரலாற்றை படிக்கப் படிக்கத் தான் .. இந்த சித்திரை ஒன்னுன்றது நம்ம புத்தாண்டே இல்லன்னு தெரிஞ்சுச்சு..

விவசாயத்தை ஆதாரமாக கொண்டு வாழ்ந்த தமிழர்கள் தை ஒன்றைத் தான் பண்டை காலம் தொட்டே தமிழ் வருடப்ப் பிரபாக கொண்டாடி வந்திருகின்றனர் ..

வள்ளுவர்  கூட தொழில்களில் உழவை தான் முதன்மைத் தொழிலாக கொண்டார்..

உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம்
தொழுதுண்டு பின் செல்பவர்


என்று அவர் கூறியதை மறக்கலாகாது ..

இப்படி உழவுத் தொழிலை மையமாக கொண்டு வாழ்ந்த தமிழன் என்று இந்த சித்திரை ஒன்றை தமிழ்ப் புத்தாண்டாக கொண்டாட ஆரம்பித்தான்??

சரி அதற்க்கு முன் இந்த சித்திரை ஒன்றை மையமாக கொண்ட அறுபது ஆண்டு கணக்கின் வரலாற்றுப் பின்னணி தான் என்ன??

வரலாறாவது மண்ணாவது .. ஆரியன் என்னைகையா வரலாற பத்தி கவலை பட்டுருக்கான் .. அவன் என்னைக்குமே புராணப் புரட்டயல்லவா நம்பி இருக்கிறான்.. கதை இதோ..

எந்நேரமும் மேலோகத்தில் குழப்பத்தை விழைவித்து எல்லாம் நன்மைக்கே என்று அந்தர் பல்டி அடிக்கும் நாரதர்க்கு அன்று ஒரு வினோத ஆசை .. இப்படி பெருமாள் மீது இத்தனை அன்பு வைத்திருக்கிறோமே .. அவர் நாமத்தையே என்றும் ஜெபித்துக் கொண்டிருக்கிறோமே .. அவருடன் கலவி செய்தால்  எப்படி இருக்கும் என்று ..

தயக்கம் ஏன்!! உடனே சென்றார் பெருமாளிடம் ..

தன் ஆசையையும் கூறினார் .. கலவிக்கு என்றுமே பச்சைக் கொடி காட்டும் இந்து தெய்வங்கள் எதை எண்ணித் தான் தயங்கினார்கள் ..

உடனே பெருமாளும் இசைந்தார் .. நாரதர் பெண் வடிவம் கொண்டார்.. இருவரும் கூடினர்..

அவர்கள் கூடி பெற்றக் குழந்தைகள் அறுபது பேர்.. பிரபவ தொடங்கி அட்ச்சய வரை.. அதில் ஒரு பெயர் கூட தமிழ் பெயர் கிடையாது என்பதை காண்க !!!

இந்த அறுபது பெயர்களும் அறுபது ஆண்டுகளின் பெயர்களாக ஆகின.. இந்த அறுபது ஆண்டுகளும் சுழற்சி முறையில் வந்து கொண்டே இருக்கும்..
ஆரியர் எப்படி நான்கு யுகங்களும் சுழற்சி முறையில் வருமோ அதே போல் அறுபது ஆண்டுகளும் சுழற்சி முறையில் வரும் என்று கூறினார்கள் என்பதை மனதில் கொள்க!!! இப்படி சுழற்சி முறையில் ஆண்டுகளை குறிக்க உள்ள நோக்கம் தான் என்ன என்று சில எண்ணலாம்..

"Time As A Metaphor Of History " என்ற தலைப்பில் ரொமிலா  தப்பார் என்ற சரித்திர ஆய்வாளர் ஆற்றிய உரையில் இந்த சுழற்சி யுக முறை என்ன  சமூதாயத்தில்  பாதிப்பை கொண்டு வந்தது என்று தெளிவாக கூறுகிறார்..

 சுழற்சி யுக முறையை கொண்டுள்ள காரணத்தால் நிகழ்வுகளுக்கு முக்கியத்துவம் அளிக்காத மனநிலை மக்களிடத்தில் தோன்றுகிறது.. சத்ய யுகத்தில் ஆரம்பித்து உலகில் சத்யம் குறைந்து கொண்டே வந்து கலி யுகத்தில் முற்றிலுமாக அழிந்தது கல்கி என்ற அவதாரம் தோன்றி அநீதியை அழித்த பிறகு சத்ய யுகம் மறுபடியும் தோன்றும்.. இது தான் ஆரியர்  கட்டி விடும் கதை..

 எடுத்துக் காட்டாக கலியுகத்தில் உள்ள ஒருவனிடம் இந்த அநீதியை எதிர்த்து  ஏதாவது செய்ய வேண்டியது தானே என்று கேட்டால் அவன் என்ன சொல்லுவான்? கலியுகத்தில் இப்படி தான் இருக்கும்.. இறைவன் வந்து தான் எல்லாத்தையும் சரி செய்ய வேண்டும் என்று கூறுவான் .. மேலும் சத்ய யுகம் பிறந்தாலும் மீண்டும் கலியுகதிக்கு தான் கொண்டு வந்து விடும் பல ஆண்டுகள் கழித்து.. இது மூலம் முன்னேற்றம்  என்ற வார்த்தைக்கே அர்த்தம் இல்லாமல் போகிறது .. மக்களும் எந்த ஒரு மாற்றத்திற்காகவும் பாடு படாமல் எல்லாம் தன்னால் நடக்கும் என்ற மனநிலைக்குத்  தள்ளப் படுகிறார்கள்..

இதனால் யாருக்கு லாபம்? ஆர்யத்தின் சூத்திரதாரியான பார்பனுக்கு தான்!!!.. உழைக்காமல் உண்ணும் அவனை எவனும் கேள்வி கேட்கப் போவதில்லையே மாற்றத்தின்  மீது நம்பிக்கை வைக்காத மக்கள்..

எவ்வளவு பெரிய ஆரிய சூழ்ச்சி!!!

இந்த கேவலமான புராணக்  கதையையும்  (புராணக் கதையில் எந்தக் கதை கேவலமாக இல்லை? என்று நீங்க கேக்கலாம் .. அதுவும் சரிதான் .. ) அந்த ஆண்டு முறையையும் தமிழர்கள் மத்தியில் புகுத்தியது ஆரியம்.. சாலிவாகனன்  என்ற அரசனால் தான் கி.பிக்களில் புகுத்தப் பட்டது என்று வரலாறு கூறுகிறது ..

இந்தக் அசிங்கத்தில் இருந்து தமிழர்கள் விடுபட வேண்டும் என்று பெரியார் , மறைமலை அடிகளார் போன்றோர் முயற்சி எடுத்தனர் ..

திருவள்ளுவர் ஆண்டு முறையை பின்பற்றுவதே தமிழர்கள் சுயமரியாதையுடன் வாழ வழி வகுக்கும்.. தை ஒன்றை தமிழர் புத்தாண்டாக சுய மரியாதையுடன் கொண்டாடுவோம்..



 கலைஞர் தமிழ்ப் புத்தாண்டு தை ஒன்று தான் என்று அறிவித்தப் பிறகும் .. "கலைஞர் சொன்னா.. மாறிடுமா.. நான் சித்திரை ஒன்னை தான் கொண்டாடுவேன்" என்று பிடிவாதம் பிடிகின்றனர் தமிழர்களில் சிலர் ; கலைஞர் மேல் உள்ள கோவம் உண்மையை புறம் தள்ளுகிறது..

அம்மையார் ஜெயலலிதா தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளாராம்   .. அவர் ஆட்சிக்கு வந்தால் அதை மாற்றக் கூடும் .. அனால் உண்மையை அறிந்து பகுத்தறிவுடன் செயல் படுங்கள் தோழர்களே..

உண்மையை கூறி தோழர்களை தெளிவு பெறச்செயுங்கள்!!!
தமிழர் புத்தாண்டு தை ஒன்றே என்று உரக்கச் சொல்லுவோம்  ..!!
ஆரிய மாயையிலிருந்து விடு படுவோம் !!!




Saturday 9 April 2011

அண்ணா ஹசாரே - நாடகம் தான் நடக்குதய்யா !!!!!!




அண்ணா ஹசாரே.. உலகக் கோப்பை வென்ற செய்தியையே தேய்ந்த ரெக்கார்ட் போல திருப்பி திருப்பி போட்டுக் கொண்டே இருந்த  நியூஸ் சேனல்களுக்கும் அதை பார்த்து அலுத்துப் போன நாட்டு மக்களுக்கும் நாலு நாட்களாக செய்தி தீனி போட்டுக் கொண்டிருப்பவர் ..

"லோக் பால்" என்னும் லஞ்ச ஒழிப்பை மையப் படுத்தும் சட்டத்தில் திருத்தும் கொண்டு வர வேண்டும் என்றும்  அந்த காரிய கமிட்டியில் அரசில் அல்லாத மக்கள் பிரதிநிதிகளும் இடம் பெற வேண்டும் என்ற கோரிக்கையோடு உண்ணா விரதத்தை துடங்கினார் ஏப்ரல் 5 2011  அன்று..



அது வரை இவரை பற்றி அனேக பேருக்கு தெரிந்திருக்காது.. என்னையும் உட்பட .. லோக் பல் சட்டத்தை பற்றியும் பல பேரு கேள்விப் பட்டிருப்பார்களா  என்பதும் சந்தேகமே..

அனால் கடந்த நான்கு நாட்கள் அவருக்கு நாடெங்கும் , தமிழகம் உட்பட ஆதரவு பெருகியது பெருவியப்பை அளித்தது.. எங்கும் நியூஸ் சேனல்கள் மக்களின் குரலை கேட்க சுறுசுறுப்பாக வேலை பார்த்துக்கொண்டிருந்தது..

தமிழகத்தில் கோயம்புத்தூர்,சென்னை ஆகிய இரண்டு நகரங்களிலும் அண்ணா ஹசாறேவிர்க்கு  ஆதரவு தெரிவிக்கும் வகையில் பெரிய கூட்டம் கூட்டப்பட்டது ..

பேஸ்பூக் நண்பர்களை பற்றி கேட்கவே வேண்டாம்.. எந்த ஒரு போரட்டத்திற்கும் ஒரு ஸ்டேடஸ் அப்டேட் போட்டால் தன் கடமை முடிந்தது என்று நினைக்கும் கூட்டம் தன் கடமையை(!!!) நிறைவேற்றியது..

ஈழத்தில் நம் சொந்தங்கள் இனப்படுகொலை செய்யப் பட்ட போது.. தமிழக மீனவர்களை சிங்கள இனவெறியன் வேட்டையாடிய போது .. தீண்டாமை கொடுமையை நாடெங்கும் உரக்க சொல்லிய போது .. முஸ்லிம் தோழர்களை ஆர்.எஸ்.எஸ் பாபர் மசூதியும் போதும் குஜராத் கலவரத்தின் போதும் கொன்று குவித்த போது .. ஆதிவாசிகளை "நாட்டின் பேராபத்து" என்று பிரகடனம் செய்து அவர்களை அவர்கள் நிலத்தை விட்டு ராணுவம் கொண்டு அகற்றிய போது.. காஷ்மீர் , மணிப்பூர் முதலிய மாகாணங்களில் இந்திய ராணுவம் இறையாண்மைக்கு  அப்பாவிகளை இரையாக்கிய போது வராத மக்கள் கூட்டம் இந்த எழுவது வயது முதியவரின் உண்ணா நிலை போராட்டத்திற்கு கூடியது எனக்கு பெரும் வியப்பை அளித்தது..



மேற் கூறிய எந்த பிரச்சனைக்கும் செவி சாய்க்காத மெட்ரோ சிட்டிகளில் வாழும் நடுத்தர  வர்க்கம் தான் இந்த போராட்டத்திற்கு கடலென திரண்டனர் .. "சமுதாயத்தில் வேறு எந்த பிரச்னையுமே இல்லை.. இந்த லஞ்சத்தை மட்டும் ஒழித்தோமேயானால் நாடு வல்லரசாகும்" என்று நினைக்கும் நடுத்தர வர்க்க கூடத்தின் மனோபாவம் மீண்டும் ஒரு முறை வெளிச்சத்திற்கு வருகிறது .. அவர்களுக்கு இந்த ஒரு போராட்டம் பெரும் மன நிம்மதியை  கொடுத்திருக்கும்.. "நம்மை  சமூக அக்கறை இல்லாதவர்கள்" என்று கூறினார்களே.. பார்தீர்கள நாம் எவ்வளவு பெரிய சாதனையை படித்திருக்கிறோம் என்றும், புரட்சியை செய்து காட்டிறுக்கிறோம் என்ற அக மகிழ்ச்சியுடன் உலவுவார்கள்.

மாதம் ஒரு முறை கையில் தேசியக் கொடியும் , அதை ஆட்டுவதற்கு ஒரு இடம்மும் கொடுத்தால் எந்த ஒரு உரிமைப் போராட்டத்தையும் தேசத்திற்கான பேராபத்து என்று பின்னுக்கு தள்ளிவிடலாம் என்ற ஆளும் வர்கத்தின் கொள்கைக்கு  இது ஒரு மகத்தான வெற்றி..

எந்த ஒரு நிகழ்விற்கும் தர்க நியாயங்களை நாடாமல் உணர்ச்சிக்கு முன்னுரிமை அளித்து மக்களை மூளைச் சலவை செய்யும் செய்தி ஊடகங்கள் இந்த முறையும் அதையே செய்தன.."நாட்டில் பெருழ்ச்சி உண்டாகி  விட்டது" என்று கூறின.. மெட்ரோ நகரங்களில் அன்று மெழுகுவருத்தி  ஏத்தி வைத்த கூட்டம் மொத்த மக்கள் தொகையில் எத்தனை சதவிகிதம் இருக்கும் என்று நீங்கள் நினைகிறீர்கள் ?? இதனை எப்படி பெருழ்ச்சி என்று கூற முடியும்.. இதையெல்லாம் சிந்திக்கும் நிலைமையில் மக்கள் இல்லை!!!

முதலில் நான் செய்திகளில் பார்த்த அண்ணா ஹசாரே அமர்ந்திருந்த மேடையே எனக்கு குழப்பத்தை உண்டாகியது

பாரத மாதா,

அவள் காலடியில் பகத் சிங்க், சுக்தேவ், ராஜகுரு,

இவர்கள் என்ன அகிம்சை போரில் ஈடு பட்டவர்களா????

அல்ல அகிம்சை போராட்டத்தை தான் ஆதரிதவர்களா??

அல்ல பாரத மாதாவிற்கு  தான் உளைத்தவர்களா ??

ஆங்கிலேயன் மட்டும் அல்ல.. உழைக்கும் வர்கத்திற்க்கு இந்திய முதலாளியும் எதிரியே .. அவனையும் எதிர்த்து தான் போராட வேண்டும் என்ற மார்சிய சிந்தனையோடு போராடிய பகத் சிங்கை அவரின் கொள்கையிலிருந்து பிரித்தெடுத்து இளைங்கர்களை ஏமாற்ற ஹிந்துத்வா இயக்கம் செய்யும் வேலையே தான் இவரும் செய்திருக்கிறார் என்று நான் கூறுவேன் ..

கூட்டத்தில்  தேசிய கொடிகளும் , "ரகு பதி ராஜாவா ராஜாராம்" பாடலும் பலரால் படப் பட்டது ..

ஐரோம் ஷர்மிளாவின் அஹிம்சை போராட்டத்தை பற்றி கவலை படாத, அல்லது அதை அறிந்து கூட இராத  ஒரு கூட்டம் வெள்ளை உடை அணிந்து கை தட்டி ஆரவாரம் செய்து கொண்டிருந்தது..

இதற்க்கு இடையில் நான் வலையில் உலவும் போது அண்ணா ஹசாறேவின் இந்த போராட்டத்தை பற்றிய ஒரு அழகான ஆழமான பதிவு படிக்க நேர்ந்தது .. இதனை அனைவரும் படிக்க வேண்டிய ஒரு பதிவு என்றே நான் கருதிகிறேன் ..

அந்தப் பதிவில் உள்ள அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய செய்தி என்று நான் கருதுவதை மட்டும் தமிழாக்கம் செய்கிறேன் ..

" "ஜன லோக் பல்" சட்டம்  இந்தியா இது வரை கண்டிராத ஒரு பலமிக்க நிறுவனமாக "லோக் பல் " இயக்கத்தை நிர்ணயிக்க முயல்கிறது .. சட்டத்தை இயற்றவும் , சட்டத்தை நடைமுறை படுத்தவும் , ஒருவரை தண்டிக்கவும் அதிகாரத்தை கொண்டுள்ள இயக்கமாக இது இருக்கும் .. இந்த லோக்பால் அமைபிற்கு நியமனம் செய்யும் உரிமை யார் யாருக்கு இருக்கிறது .. பாரத ரத்னா விருது பெற்றவர்கள், இந்திய வம்சாவளியை சேர்ந்த நோபெல் பரிசு பெற்றவர்கள் , சுப்ரீம் கோர்ட்டை சேர்ந்த மூத்த நீதிபதிகள், தேர்தல் ஆணையர் ,  லோக் சபா மற்றும் ராஜ்ய சபாவின் சபாநாயகர்கள்.. இதில் லோக் சபா சபாநாயகரை தவிர வேறு யாரும் மக்களால் தேர்ந்தெடுக்க பட்டவர்கள் அல்ல. இவர்கள் மக்களுக்கு பதில் சொல்ல வேண்டிய கடமையில் இருப்பவர்களும் அல்ல ..

ஒரு சமூகத்தை ஆட்டி படைக்கும் சக்தியை சமூகத்தில் உயர்நிலையில் இருபவர்களிடம் கொடுக்கும் செய்யலில்லாமல் இது வேறு என்ன?? இந்த ஜன லோக் அமைப்பு செயல்பாட்டிற்கு வருமேயானால் அது இந்தியா சனநாயகர்திக்கு கேடாகவே முடியும்!! எந்த ஒரு பாசிச இயக்கமும் சமூதாயத்தை அதன் கேடுகளில் இருத்து விடுவிப்பதற்கான போர் முரசை கொட்டிய தொடங்கும்.. அதற்க்கு உணர்ச்சியால் மட்டும் ஒன்று படும் மக்கள் கூட்டமும் பின்னால் இருக்கும் " என்று அதை எழுதிய சுத்தப்ரத சென்குப்தா கூறுகிறார்..

ஸ்பெக்ட்ரம்  ஊழல் , காமன் வெல்த் ஊழல் என்று பல தவறுகளை செய்த காங்கிரஸ் அரசு இவரின் போராட்டத்திற்கு செவி சாய்ப்பதன்  மூலம் மக்களின் நம்பிகையை பெறும் என்று நான் கருதிகிறேன்.. "இதோ உங்களின் குரலுக்கு மதிப்பு இருக்கிறது.. இங்கு நடப்பது மக்களாட்சி தான் .. பெரும் முதலாளிகள் இயக்கும் ஒரு சுரண்டல் ஆரசு அல்ல" என்று காங்கிரஸ் மட்டும் அல்ல இந்திய தேர்தல் கட்சிகள் அனைத்தும் புன் முறுவலுடன் மக்கள் முன் வந்து நிற்பர். ஒரு வேளை இதனால் தான் இந்த போராட்ட நாடகம் அரங்கேருவதர்க்கே  மத்திய சர்கார் அனுமதித்ததோ என்ற சந்தேகம் எழுகிறது!!! அருந்ததி ராயையும் பினாயக் சேனையும் தூற்றிய இந்த ஊடங்கள் இந்த உண்ணாவிரதத்தை முழு நேரமாக ஒழி பரப்பியது இந்தர்க்காகத்தானோ?? 


அண்ணா ஹசாரே -- இன்னும் சில காலம், அந்த சட்டம் நிறைவேற்றப்படும் வரை கலி போக்க வந்த கல்க்கியாகவே மக்களுக்கு இவர் காட்சியளிப்பார்

அண்ணா ஹசாரே -- இந்தியாவில் எல்லா உரிமை பிரச்சனைகளையும் மறக்கடிக்க ஊடகங்களுக்கு இவர் இன்னும் சில காலம் பயன் படுவார்

அண்ணா ஹசாரே -- இனி வரும் காலங்களில் வேறு வடிவம் பெரும் சமூக போராட்டங்களை நீர்த்து போக செய்ய இவரின் பெயர் இந்திய அரசுக்கு பயன் படும் ..

Wednesday 6 April 2011

அய்யய்யய்யய்யய்யய்யய்யய்யய்யய்


Proud to be Indian

We won

Its ours

We are the champions

hooooooo.. i am flying in the air..

Go India Goooooooooooooooo...

Chak de India..

Proudest moment of my life..

ஒரு நாலு நாளா எங்க பாத்தாலும் இத தான்ணே எழுதி வைச்சுருக்காயிங்க ..

ஒரு கிரிக்கெட் மேட்ச் ஜெய்ச்சதுகாடா  இந்த அக்கப் போரு..

ஒரு கோடி ரூபாயும் பதக்கமும் அவனுக்கு தான் குடுத்துருக்காயிங்க 

மம்தா பானர்ஜி அம்மா டிரைன் டிக்கெட் வேற ப்ரீய குடுக்குறேன்னு அறிவிசுடுச்சு ..

இப்போ கிங் பிஷேர் ப்ளைட்ல ப்ரீ டிக்கெட்டாம் அம்புட்டு பயலுக்கும்..

இன்னும் என்னன்ன ப்ரீயா குடுக்க போராயிங்கன்னு தெரியல ..

ஆபீஸ் குள்ள போனா மேனேஜர் வந்து "கன்க்ராட்ஸ் வி வான் தி வேர்ல்ட் கப்" னு ஸ்வீட் குடுக்குறாரு

ஏற்கனவே பெரிய ஸ்க்ரீன்ல பீர் வங்கி வைச்சு மேட்ச் பத்தாயிங்க இந்திய பாகிஸ்தான் விளையாண்டப்போ..

"டேய் ஒரு வேர்ல்ட் கப்க்கு ஏன் இப்படி அலட்டுராயிங்க"னு சொனதுக்கு "உனக்கு தேசப்பற்றே இல்ல.. உன்ன எல்லாம் நாடு கடத்துனா கூட தப்பு இல்லடா" னு  சொல்லிதான் என் நண்பன்..

வார இறுதில அலுமினி மீட் ஸ்கூல்லன்னு  ஆர்வமா டிக்கெட் எல்லாம் எடுத்து வைசுருந்தேன்.. "we being patriotic indians postpone the alumi meet as we have got the world cup final match on saturday" னு மெயில் அனுப்புராயிங்க .. 

உங்க தேச பக்தி புல் அறிக்க வைக்குது பாஸ்..

ஏதோ  படிக்காதவன் தான் கிவாடர்க்கு ஆசை பட்டு நாட்டை அடகு வைச்ச மாறி பேசுற படிச்சவனுங்களா.. அவனுக்கு கிவடரும் கோழி ப்ரியாநியும்னா உங்களுக்கு கிரிக்கெட்டும் கபே டேயும்.. என்னத்த பெரிய வித்யாசம்..

பயம்  ஒண்ணு  தான்.. அடுத்த உலக கோப்பை ஜெய்ச்சா இந்தியா வல்லரசு ஆய்டுச்சுன்னு சொல்லிருவாயிங்களோன்னு  தான் கொஞ்சம் திக்கு திக்குன்னு இருக்கு